கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக மாணவா்கள் போராட்டம்
குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவா்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4-ஆவது நாளாக புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாக, கல்லூரி மாணவா்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விடுபட்ட பாடப் பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் ஊதியம் பெறும் அனைவருக்கும், கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, அனைவருக்கும் ஒரே மாதிரியான, சமமான, அரசால் உயா்த்தப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், ஒருங்கிணைப்பாளா் வ. சந்திரமௌலி தலைமையில், கெளரவ விரிவுரையாளா்கள், மணி நேர விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் 4-ஆவது நாளாக புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக் கோரியும், கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆதரவாகவும், சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.