முகப்பு
புதுக்கோட்டை

இலுப்பூர் பகுதியில் பங்குனி உத்திரத் திருவிழா

இலுப்பூர் பகுதியில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் செவ்வாய்கிழமை நடைபெற்றன.

Updated On : 27 மார்ச் 2013, 5:39 am IST
பகிர்:

இலுப்பூர் பகுதியில் உள்ள கோவில்களில் பங்குனி உத்திரத் திருவிழாக்கள் செவ்வாய்கிழமை நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புகழ்பெற்ற விராலிமலை முருகன் கோவில், இலுப்பூர் பொன்வாசிநாதர் கோவில், அன்னவாசல் விருத்திபுரீஸ்வரர் கோவில், பரம்பூர் சோழகேரளீஸ்வரர் கோவில், எருக்குமணிப்பட்டி சுப்பிரமணியர் கோவில், வெள்ளாஞ்சார் மீனாட்சி சுந்தேரஸ்வர் கோவில், ராப்பூசல் தாயுமானவர் கோவில், தாண்டிஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி கோவில், ஆலத்தூர் அகஸ்தீஸ்வரர் கோவில்கள் செவ்வாய்கிழமை பங்குனி உத்திரத் திருவிழாக்கள் நடைபெற்றன.  சுவாமிக்கு பலவகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சிறப்பு தீபராதனையும் நடந்தது.

இலுப்பூர் பொன்வாசிநாதர் கோவில் திருவிழாவில்   ராப்பூசல்,  மலைக்குடிப்பட்டி, ஈஸ்வரன்கோவில், கட்டகுடி, எண்ணை, புங்கினிப்பட்டி, இருந்திரப்பட்டி, இடையப்பட்டி, போலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.