FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நிர்வாகிகளிடையே  வாக்குவாதம்

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 8:42 am IST
பகிர்:

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுகையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. இதில், கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
கூட்டத்தில், நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டபோது, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் டி. புஸ்வராஜ் தரப்பினருக்கும், மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வம் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகிகளை ப. சிதம்பரம் சமாதானம் செய்ய முயன்றும் பயனளிக்கவில்லை. அதனால், கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments