FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிகள்

பொன்னமராவதி  கிளை நூலகம் சார்பில் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இளம் படைப்பாளர் விருதுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

பொன்னமராவதி  கிளை நூலகம் சார்பில் புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இளம் படைப்பாளர் விருதுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 
போட்டியை வாசகர் வட்டத்தலைவர் கே. பொன்னுச்சாமி தொடங்கிவைத்தார். தலைமை ஆசிரியை நிர்மலாதேவி முன்னிலை வகித்தார். கிளை நூலகர் பி.ராமகிருஷ்ணன் வரவேற்றார். போட்டியில், வாசித்தேன் வளர்ந்தேன் எனும் தலைப்பில் மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் மாணவிகள் வாசிப்பு பழக்கம் மற்றும் பொது அறிவினை மேம்படுத்திக்கொள்ள நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அறிவுருத்தப்பட்டது. ஆசிரியர்கள் பூபதி, செல்லப்பாண்டியன், அருள்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments