அனுமதியின்றி மணல் அள்ளிய 3 டிப்பர் லாரி, பொக்லைன் பறிமுதல்
பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 3 டிப்பர் லாரிகள், பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னமராவதி அருகே உள்ள சேரனூர் ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் விராலிமலை தனி வட்டாட்சியர் லூர்துசாமி, காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக்பாட்சா, உதவியாளர் காமராசு உள்ளிட்டோர் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.
அப்போது, அவ்வழியே அனுமதியின்றி மணல் அள்ளிவந்த டிப்பர் லாரியையும், கொப்பனாபட்டி சாலையில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்த இரண்டு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து காரையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், கூடலூர் ஆற்றுப்பகுதியில் புதுக்கோட்டை கனிமவளத் துறை தனி வருவாய் ஆய்வாளர் லட்சுமணன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அப்பகுதியில் மணல் அள்ளப்பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து காரையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.