FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கூத்தாடிவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தாடிவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி புதன்கிழமை திறந்து வைத்தார். 

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தாடிவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி புதன்கிழமை திறந்து வைத்தார். 
அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4.50 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்தத் தொட்டியை  சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ.ரெத்தினசபாபதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய ஆணையர் எம்.மணிமேகலை, முன்னாள் நகர வங்கித் தலைவர் க.சிவசண்முகம், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் த.செல்வராஜ், மாங்குடி கூட்டுறவு வங்கித் தலைவர் ராம.பஞ்சநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments