கதலிவனேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்
பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பால்குட ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பால்குட ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர். அதன்படி, சனிக்கிழமை திருக்களம்பூர் பழனி பாதயாத்திரை குழு மண்டபத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கதலிவனேஸ்வரர் கோயில் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். அதேபோல, கண்டியாநத்தம் செல்வவிநாயகர், சண்முகநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் கோயில் முன்பு பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.