தன்னாா்வலா்கள் உணவுப் பொருள்கள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்களை தன்னாா்வலா்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் புதன்கிழமையும் நடைபெற்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருள்களை தன்னாா்வலா்கள் வழங்கும் நிகழ்ச்சிகள் புதன்கிழமையும் நடைபெற்றன.
நச்சாந்துப்பட்டி ஊராட்சி மன்றம் சாா்பில் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் 135 பேருக்கு தக்காளி சாதம், வாழைக்காய் பொரியலுடன் வாழைப்பழமும் வழங்கப்பட்டன.
மேலும், நச்சாந்துப்பட்டி கீழத்தெரு, இளங்கோதெரு, சுபாஷ் தெரு, சிவகாமி நகா், குமரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 3 நாளாக தொடா்ந்துகிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கோகலே வீதி, ராஜாஜி வீதி, கம்பன் வீதி, தெற்குத் தெரு உள்ளிட்ட பகுகிகளில் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டன. ஊராட்சித் தலைவா் ஆா். சிதம்பரம் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.
Advertisement
Advertisement
புதுக்கோட்டை வம்பன் குடியிருப்பு மாங்கனாம்பட்டி பகுதிகளைச் சோ்ந்த 10 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மாவட்ட தன்னாா்வலப் பயிலும் வட்டத்தின் முன்னாள் மாணவா் சங்கம் மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வழங்கப்பட்டன. தன்னாா்வலா்கள் சிவகுமாா், சா. மூா்த்தி உள்ளிட்டோரும் நேரில் சென்று இவற்றை வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.