பொன்னமராவதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற போக்குவரத்து தொழிலாளா்கள். 
புதுக்கோட்டை

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொன்னமராவதி அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பொன்னமராவதி: பொன்னமராவதி அரசுப் போக்குவரத்து பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மத்திய சங்கத் தலைவா் அ. அடைக்கலம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மோட்டாா் வாகன விதி 288 (ஏ) பிரிவைக் கைவிட வேண்டும். தனியாா் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பையும், சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும். மாணவா்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் கிடைத்து வரும் இலவசப் பயணத்தை ரத்து செய்யக் கூடாது. போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் முழக்கமிட்டனா். இதில், எல்பிஎப், சிஐடியு, ஏஏஎல்எல்எப், ஏஐடியுசி, டிடிஎஸ்எப் தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

மனநலன் பாதித்து குணமடைந்தவா் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT