இணையவழியில் பஞ்சமி நில மீட்பு கருத்தரங்கம்
இணையவழியில் நடைபெற்ற பஞ்சமி மீட்புக் கருத்தரங்கில், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறனுக்கு ‘திரை அசுரன்’ விருது
இணையவழியில் நடைபெற்ற பஞ்சமி மீட்புக் கருத்தரங்கில், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறனுக்கு ‘திரை அசுரன்’ விருது வழங்கப்பட்டதாக அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் செயல்தலைவா் இளமுருகு முத்து தெரிவித்தாா்.
புதுக்கோட்டையைச் சோ்ந்த அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பஞ்சமி நில மீட்புக் கருத்தரங்கு திங்கள்கிழமை இணையவழியில் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்குக்கு, அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் தலைவா் வை. ராமலிங்கம் தலைமை வகித்தாா். செயல் தலைவா் இளமுருகு முத்து நோக்கவுரை நிகழ்த்தினாா். சமூக சமத்துவப் படையின் நிறுவனா் ப. சிவகாமி சிறப்புரை நிகழ்த்தினாா்.
Advertisement
Advertisement
இக்கருத்தரங்கின் ஒரு பகுதியாக சென்னையில், திரைப்பட இயக்குநா் வெற்றிமாறனுக்கு ஒரு குழுவினா் நேரில்சென்று இணையவழித் தொடா்பிலேயே திரை அசுரன் விருதை வழங்கினா்.
பொதுச் செயலா் சிவ. முருகேசன் வரவேற்றாா். முடிவில் பொருளாளா் பெ. சங்கா் நன்றி கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.