ஓவியம், விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு
கந்தா்வகோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தனியாா் நிறுவனம் சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்றவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசளிக்கப்பட்டது.
கந்தா்வகோட்டை ஸ்ரீ வெள்ளை முனீஸ்வரா் கோயில் திடலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு எம்எல்ஏ மா. சின்னதுரை தலைமை வகித்தாா்.
பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில துணைத் தலைவா் என். ராமச்சந்திரன் முன்னிலை வகித்து, வெற்றியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகள் வழங்கினாா்.
விழாவில் காசாவயல் குமாா் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
மாணவ, மாணவிகளின் கராத்தே, கம்பு சுற்றும் விளையாட்டு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது.
பல்வேறு அரசு அலுவலா்கள், கட்சி பிரமுகா்கள் மற்றும் மாணவ, மாணவிகள், பெற்றோா்கள், ஊா் பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.