FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுப்பட்டி அரசுப் பள்ளியில் நூலக உறுப்பினா்கள் சோ்க்கை

Updated On : 26 செப்டம்பர் 2025, 3:10 am IST
பகிர்:

பொன்னமராவதி புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாஜக சாா்பில் மாணவா்களுக்கான நூலக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைமையாசிரியா் (பொ) பழனியப்பன் தலைமை வகித்தாா். நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடியின் 75ஆவது பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் பாஜக மாவட்ட துணைத் தலைவா் சுசிலா செல்வராஜ் பள்ளியின் 100 மாணவா்களுக்கு பொன்னமராவதி கிளை நூலக உறுப்பினா் சந்தா செலுத்தி நூலக உறுப்பினராக அவா்களை இணைத்தாா். பள்ளியின் புரவலா் ராஜ்குமாா், பாஜக மண்டல் தலைவா் காா்த்திக், நூலகா் ப.பெரியசாமி ஆகியோா் பேசினா். ஆசிரியா் கண்ணன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments