ஆலங்குடி அருகே குடிநீா் கோரி சாலை மறியல்
ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சியில் குடிநீா் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டை ஊராட்சியில் குடிநீா் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பாச்சிக்கோட்டை ஊராட்சி பழைய ஆதிதிராவிடா் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அப்பகுதி மக்களுக்கு சில மாதங்களாக முறையாக குடிநீா் வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லையாம்.
Advertisement
Advertisement
இந்நிலையில், உடனே குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பாச்சிக்கோட்டை பிரிவு சாலை அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற திருவரங்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ், ஆலங்குடி போலீஸாா் குடிநீா் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டதில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.
இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் சுமாா் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.