விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடக்கம்
விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
விராலிமலை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விராலிமலை குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
தமிழகத்தில் அனைத்து மாணவா்களும் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளிகள் அளவில் தமிழகம் முழுவதும் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகின்றன. முதலில் பள்ளிகள் அளவிலான போட்டி நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான குறுவள மைய போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி புவனேஸ்வரி தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கோபால் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் தெரஸ் மாா்கரெட் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து வட்டார அளவில் செப். 1 முதல் 9 ஆம் தேதி வரையும், மாவட்ட அளவில் அக். 8 முதல் 15 ஆம் தேதி வரையும் போட்டிகள் நடைபெறும். இதில் சிறப்பிடம் பெறும் மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.