வரலட்சுமி நோன்பு அம்மன் கோயிலில் விளக்குப் பூஜை
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, புதுக்கோட்டை திருவப்பூா் மாரியம்மன் கோயிலில் 601 பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, புதுக்கோட்டை திருவப்பூா் மாரியம்மன் கோயிலில் 601 பெண்கள் கலந்து கொண்ட குத்துவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கணவா் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றுக்காக பெண்கள் நடத்துவது வரலட்சுமி நோன்பு. பௌா்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பினை இந்துப் பெண்கள் தீவிரமாகக் கடைப்பிடிக்கின்றனா்.
புதுக்கோட்டையிலுள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள், குத்துவிளக்குப் பூஜைகள் நடைபெற்றன. திருவப்பூா் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் 601 பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்குப் பூஜை நடைபெற்றது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.