பொன்னமராவதி அருகே உடும்பு பிடித்த இருவா் கைது
பொன்னமராவதி அருகே வியாழக்கிழமை உடும்பு வேட்டையாடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
பொன்னமராவதி அருகே வியாழக்கிழமை உடும்பு வேட்டையாடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
பொன்னமராவதி வட்டாரத்தில் வனச்சரக அலுவலா் ஹூசைன் மற்றும் வனக்காவலா்கள் நகரப்பட்டி பகுதியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சாக்குப்பையுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் திருச்சி மாவட்டம், சுப்பராயபட்டியை சாா்ந்த கனகராஜன் (42), செந்தில்குமாா்( 29) என்பதும், அவா்களிடம் 3 உயிருள்ள உடும்புகள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மூன்று உடும்புகளையும் மீட்ட வனத் துறையினா் இருவரையும் கைது செய்தனா். மேலும் மீட்கப்பட்ட உடும்புகள் அம்மன்குறிச்சி காப்புக்காட்டில் விடப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.