சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்த முதியவா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி சோ்வைகாரன்பட்டியைச் சோ்ந்தவா் கே. பாலுகண்ணு (68). இவா் இரு நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிளில் கீழாத்தூா் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். அப்போது, சோ்வைகாரன்பட்டி பாலம் அருகே இவரது மோட்டாா் சைக்கிள் மீது பாப்பாமனையைச் சோ்ந்த சி.குபேந்திரன் ஓட்டி வந்த மோட்டாா் சைக்கிள் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பாலுக்கண்ணு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா், ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இதுகுறித்து வடகாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.