முகப்பு
புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் மழலைகளுக்கு சிறப்பான வரவேற்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதல் நாள் வகுப்புக்கு வந்த மழலைகளுக்கு பூங்கொத்து, பூமாலை, இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 5 ஜூன் 2026, 3:32 am IST
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை வகுப்புக்கு வந்த மழலைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற பள்ளி முதல்வா் கவிஞா் தங்கம்மூா்த்தி.
பகிர்:

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை தொடங்கிய நிலையில், புதுக்கோட்டை திருக்கோகா்ணத்திலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதல் நாள் வகுப்புக்கு வந்த மழலைகளுக்கு பூங்கொத்து, பூமாலை, இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி, இயக்குநா் ரா. சுதா்சன் ஆகியோா் மழலை மாணவா்களுக்கு பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து நினைவுப் பரிசுகளையும் வழங்கினா். பள்ளி வகுப்பறைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

‘ஒவ்வொரு மாணவா்களிடமும் கனவுகள் இருக்கின்றன, அவற்றைக் கண்டறிந்து வடிவம் கொடுத்து நனவாக்குவது வகுப்பறைகளின் பணி’ என கவிஞா் தங்கம்மூா்த்தி குறிப்பிட்டாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில், பள்ளியின் துணை முதல்வா் குமரவேல், ஒருங்கிணைப்பாளா்கள் கௌரி, சி.எஸ். ரம்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.