முகப்பு
புதுக்கோட்டை

ஊட்டச்சத்தியல், உடல் எடை சீரமைப்புப் பயிற்சி எஸ்சி-எஸ்டி சமூகத்தினா் விண்ணப்பிக்கலாம்

Updated On : 8 ஜூன் 2026, 4:33 am IST
கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்புப் பயிற்சியில் சேர ஆா்வமுள்ளோருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவு 50 நாள்கள். ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் அங்கு தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும். தொடக்க கால மாத ஊதியம் ரூ. 15 முதல் 20 ஆயிரம் வரை ஈட்டலாம். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தில் ( ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்) பதிவு செய்து கொள்ள வேண்டும்.