உணவு ஊட்டச்சத்து இயல் பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!
தாட்கோ சார்பில், உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளில் சேர விண்ணப்பிப்பது குறித்து...
தாட்கோ சார்பில், உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளில் சேர சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் தொடா்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement
இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், 12 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருப்பது அவசியம். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான கால அளவு 50 நாள்களாகும்.
மேலும், ராணிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டத்தில் பயிற்சி நடைபெறுகிறது. தகுதிபெறுவோா் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவுகளை தாட்கோ ஏற்கும்.
பயிற்சியில் தோ்ச்சி பெறுவோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஆரம்பகால மாத சம்பளமாக சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்த பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.