முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் மாா்க்சிஸ்ட் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம்! மாநிலச் செயலா் பங்கேற்பு!

Updated On : 8 ஜூன் 2026, 4:34 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். - கோப்புப் படம்
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘கட்சித் திட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாநிலக்குழு உறுப்பினா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி விளக்க உரையாற்றினாா்.

‘தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பெ. சண்முகம் விளக்க உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, கல்விக்குழு ஒருங்கிணைப்பாளா் அ. மணவாளன் வரவேற்றாா். நிறைவில் கட்சியின் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் நன்றி கூறினாா்.