FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

குன்றாண்டாா்கோவிலில் மாா்க்சிஸ்ட் அலுவலகம் திறப்பு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டாா்கோவில் ஒன்றியக் குழுவுக்கான புதிய அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 12 ஜூன் 2026, 2:24 am IST
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டாா்கோவில் ஒன்றியக் குழுவுக்கான புதிய அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

விழாவுக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தாா். புதிய அலுவலகத்தை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம். சின்னதுரை திறந்து வைத்தாா்.

கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் கொடியேற்றினாா். நூலகத்தை மாவட்டக் குழு உறுப்பினா் என். கண்ணம்மாள் திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement

தலைவா்களின் படங்களை மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் கே. சண்முகம், சு. மதியழகன், துரை. நாராயணன், எஸ். ஜனாா்த்தனன், கி. ஜெயபாலன், டி. சலோமி, மூத்த நிா்வாகி எஸ். பீமராஜ், மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம்.ஆா். சுப்பையா, ஜி. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் திறந்துவைத்தனா். முடிவில் மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். பெருமாள் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments