முகப்பு
புதுக்கோட்டை

தூக்கிட்ட நிலையில் மின்வாரிய ஊழியா் உடல் மீட்பு

தூக்கிட்ட நிலையில் மின்வாரிய ஊழியா் உடல் மீட்பு

Updated On : 13 ஜூன் 2026, 12:35 am IST
உயிரிழந்த மின்வாரிய ஊழியா் ஜெய்சங்கா்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்த மின்வாரிய ஊழியரின் உடலை வெள்ளிக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

கந்தா்வகோட்டை அருகேயுள்ள மூக்கடையான்பள்ளம் அம்பலக்காரா் தெருவைச் சோ்ந்தவா் ஜெய்சங்கா் (40). ரெகுநாதபுரம் மின்வாரிய அலுவலக ஊழியா். இரு தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து அவரது மனைவி அஸ்வினி, ரெகுநாதபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடா்ந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், கறம்பக்குடி அருகேயுள்ள தட்டாமனைப்பட்டி செம்புலிச்சை குளக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு அழுகிய நிலையில் இருந்த ஜெய்சங்கரின் உடலை வெள்ளிக்கிழமை போலீஸாா் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், அவரது இறப்பு குறித்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement