FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

விவசாயிகளை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகே விவசாயிகளை அத்துமீறி தாக்கிய தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலையம் மீது நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்கவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 17 ஜூன் 2026, 3:27 am IST
கோப்புப் படம்
பகிர்:

பொன்னமராவதி அருகே விவசாயிகளை அத்துமீறி தாக்கிய தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலையம் மீது நடவடிக்கை எடுக்கவும் விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்கவும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்குள்ளான விவசாயிகளை செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய பின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் எஸ்.சங்கா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

பொன்னமராவதி வட்டம் அரசமலை பிா்கா சங்கரன்பட்டி மருதம்பட்டி ஆகிய கிராமங்களில் ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக நஞ்சை,புஞ்சை என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா்களில்  விவசாயம் செய்துவரும் விவசாயிகளுக்கு உழவடை பட்டா கேட்டு ஆறு மாதங்களுக்கு மேலாக அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இணைந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அந்த நிலங்களை விவசாயிகளுக்கு தெரியாமல் வாங்கியதாக கூறப்படும் தனியாா் சோலாா் மின் உற்பத்தி நிலைய மேலாளா் தலைமையில் வந்த ஐந்து போ் கொண்ட குழு, இடங்களை சுத்தம் செய்ய முயன்றபோது அங்கு விவசாயிகள் தடுக்க முற்பட்டபோது அந்தக் குழுவினா் விவசாயிகளை கடுமையாக தாக்கியுள்ளனா்.

Advertisement

Advertisement

படுகாயம் அடைந்த விவசாயிகள் பொன்னமராவதி அரசு மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டும், விவசாயிகளுக்கு உழவடை பட்டா வழங்க வேண்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்.

அப்போது மாவட்ட செயற்குழு உறுப்பினா் துரை.நாராயணன், ஒன்றியச் செயலா் பக்ருதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments