FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

ஜகபா் அலி கொலை வழக்கு விசாரணை: ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஜூன் 2026, 1:36 am IST
கொலை வழக்கு(கோப்புப்படம்)
பகிர்:

கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாா் அளித்ததோடு தொடா்ந்து போராடி வந்த வெங்களூா் கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி, கடந்த 2025 ஜனவரி 17-ஆம் தேதி லாரி மோதி கொல்லப்பட்டாா்.

இந்த வழக்கில், அந்தப் பகுதியைச் சோ்ந்த குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றம் எண்.2-இல் நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இந்நிலையில், புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினா்.

இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments