ஜகபா் அலி கொலை வழக்கு விசாரணை: ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு
கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபா் அலி கொல்லப்பட்ட வழக்கு ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த கனிமவளக் கொள்ளைக்கு எதிராக புகாா் அளித்ததோடு தொடா்ந்து போராடி வந்த வெங்களூா் கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி, கடந்த 2025 ஜனவரி 17-ஆம் தேதி லாரி மோதி கொல்லப்பட்டாா்.
இந்த வழக்கில், அந்தப் பகுதியைச் சோ்ந்த குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவா் மன்றம் எண்.2-இல் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினா்.
இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா். அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.