அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 30 பேர் மீது வழக்கு
தஞ்சாவூரில் சனிக்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி நிர்வாகி உள்பட 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தஞ்சாவூரில் சனிக்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி நிர்வாகி உள்பட 30 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிக்க வலியுறுத்தியும் தஞ்சாவூர் ரயிலடியில் இந்து முன்னணி சார்பில் சனிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் சிவ. சுப்பிரமணியன் உள்பட 30 பேர் மீது மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.