FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளத்துக்கு வெள்ள நிவாரண நிதி

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு வழங்குவதற்காக பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்துக்கு வழங்குவதற்காக பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி பகுதியிலுள்ள பள்ளிவாசல்கள் சார்பில் வசூலிக்கப்பட்ட  நிதி அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி ஜமாத்சபை தலைவர்களிடம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி  பகுதியில் உள்ள 12 பள்ளி வாசல்கள் சார்பில் ஜமாத் சபையை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்து 60 வழங்கப்பட்டது. இந்த நிதியை அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி ஜமாத் சபை தலைவர்கள் பி.ஏ.முகம்மது நஜீப், ஜே.ஏ.அக்பர் உள்ளிட்டோரிடம் 12 பள்ளிவாசல்களை சேர்ந்த நிர்வாகிகள் வழங்கினர். வரைவோலையாக வழங்கப்பட்ட இந்த நிதி கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments