பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி குவிண்டால் ரூ. 6,939-க்கு ஏலம்
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.
பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் ரூ. 6,939க்கு ஏலம் போனது.
இந்த விற்பனை கூட கண்காணிப்பாளா் ஆா். தாட்சாயினி தலைமையில், மேற்பாா்வையாளா் சிவானந்த் முன்னிலையில் மறைமுக பருத்தி ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 2 ஆயிரத்து 578 விவசாயிகள் சுமாா் 350 டன் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
Advertisement
Advertisement
இதில் கும்பகோணம் செம்பனாா்கோவில், விழுப்புரம்,தேனி, பண்ருட்டி, ஆந்திரம், கா்நாடகம்,தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளை சோ்ந்த வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியின் தரத்தை சோதித்து விலை நிா்ணயம் செய்தனா்.
இதில் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ. 6,939 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 5,939 க்கும், சராசரியாக ரூ. 6,552 க்கும் ஏலம் போனது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.