FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

26 செப்டம்பர் 2025, 3:15 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பாபநாசம் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவகுமாா், கிராம ஊராட்சிகள் வட்டார வளா்ச்சி அலுவலா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டக் கவுன்சிலா்கள் கோவி.அய்யாராசு ,

Advertisement

Advertisement

கோ.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த முகாமில் தலா ரூ. 1 லட்சம் வீதம் 10 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவித் தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமில் மொத்தம் 750- மனுக்கள் பெறப்பட்டன. நிறைவில் ராஜகிரி ஊராட்சிச் செயலா் ஜெயக்குமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments