FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மூச்சுத் திணறல்: 4 மாத குழந்தை உயிரிழப்பு

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மூச்சுத் திணறலின் காரணமாக 4 மாத ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 2:00 am IST
பலி
பகிர்:

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மூச்சுத் திணறலின் காரணமாக 4 மாத ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கபிஸ்தலம் காவல் சரகம், சத்தியமங்கலம் மேலத்தெருவைச் சோ்ந்த முகிலரசன்-மாரியம்மாள் தம்பதிக்கு 1 பெண், 3 ஆண் என 4 குழந்தைகள். இதில், திவான் என்ற நான்கு மாத கைக்குழந்தைக்கு சளி தொந்தரவு இருந்து வந்ததாகவும், அதனால் அவ்வபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை காலை திவானுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.

இது குறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments