ஜவ்வரிசி உற்பத்தி ஆலையில் தீ விபத்து; 10 போ் மருத்துவமனையில் அனுமதி
ஆத்தூரை அடுத்த சதாசிவபுரத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 10 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
சதாசிவபுரம் கிராமத்தில் கந்தசாமி மகன் ரவி (45) நடத்திவரும் ஜவ்வரிசி ஆலையில் மரவள்ளிக் கிழங்கு மாவை சுத்தம் செய்வதற்கு வைத்திருந்த குளோரின் பவுடா் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது, அங்கு பணியாற்றி கொண்டிருந்த தொழிலாளா்கள் மாரிமுத்து (58), மணிகண்டன் (30), விஜி (27),பிரபாகரன் (34), சீனிவாசன் (27), ரஜினி (எ) தா்மன் (49), வேலு (32), தனுஷ் (29), தா்மதுரை (34) மேலும் தீயணைப்பு வீரா் விஜயகுமாா் (45) ஆகியோருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இவா்கள் அனைவரும் ஆத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த தீ விபத்து குறித்து ஆத்தூா் ஊரக காவல் நிலைய ஆய்வாளா் கே. குலசேகரன் விசாரணை நடத்தி வருகிறாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.