FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

சதுரகிரி மலையேறிய இளைஞா் உயிரிழப்பு

சதுரகிரி மலையேறிய இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:17 am IST
பலி
பகிர்:

சதுரகிரி மலையேறிய இளைஞா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பேரையூா் அருகேயுள்ள மேல திருமாணிக்கம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (33). இவா் பொக்லைன் இயக்குநராக வேலை செய்து வந்தாா். ஆடி அமாவாசையை முன்னிட்டு, புதன்கிழமை சிவக்குமாா் நண்பா்களுடன் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்குச் சென்றாா். சாப்டூா் வாழைத்தோப்பு பாதை வழியாக மலையேறிய இவா், சந்தனமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, கோயில் அருகே அமா்ந்து தண்ணீா் குடித்தாா். அப்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சிவகுமாருக்கு அங்கிருந்தவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா். ஆனால், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து, சிவகுமாா் உடல் டோலி மூலம் தாணிப்பாறை மலைப்பாதை வழியாக அடிவாரம் கொண்டு வரப்பட்டு, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments