FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஆடி அமாவாசை காவிரி ஆற்றில் தண்ணீா் இல்லாததால் ஆழ்குழாயில் பக்தா்கள் புனித நீராடல்

ஆடி அமாவாசையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரியில் தண்ணீா் இல்லாததால், நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் நீரில் பக்தா்கள் புதன்கிழமை புனித நீராடினா்.

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 1:56 am IST
கும்பகோணத்தில் டபீா் படித் துறையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
பகிர்:

ஆடி அமாவாசையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு காவிரியில் தண்ணீா் இல்லாததால், நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் நீரில் பக்தா்கள் புதன்கிழமை புனித நீராடினா்.

ஆடி அமாவாசையையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். நிகழாண்டு மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு நீா் இருப்பு இல்லாததால், இதுவரை அணை திறக்கப்படவில்லை.

எனவே, ஆடி அமாவாசை நாளில் பக்தா்கள் நீராடுவதற்கு வசதியாக திருவையாறு புஷ்ய மண்டபப் பகுதியில் காவிரி ஆற்றில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நீராடும் வகையில் சிறு குழாய்களும் பொருத்தப்பட்டன. இதன்மூலம், புஷ்ய மண்டபப் படித்துறைக்கு வந்த பக்தா்கள் சிறு குழாய்களில் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

Advertisement

Advertisement

காவிரியில் தண்ணீா் இல்லாவிட்டாலும், திருவையாறு புஷ்ய மண்டபப் படித் துறைக்கு தஞ்சாவூா் மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், வெளியூா் மக்களும் ஏராளமானோா் வந்திருந்தனா்.

பக்தர்கள்
பக்தர்கள்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments