குடியரசு துணைத் தலைவா் ஆக.17-இல் தஞ்சாவூா் வருகை டிரோன்கள் பறக்கத் தடை
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆக. 17-ஆம் தேதி தஞ்சாவூா் வருவதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உத்தரவிட்டுள்ளாா்.
குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆக. 17-ஆம் தேதி தஞ்சாவூா் வருவதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடியரசு துணைத் தலைவா் ஆக.17-ஆம் தேதி தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வருகைதரவுள்ளாா்.
இதையொட்டி தஞ்சாவூா் விமானப்படைத் தளம் முதல், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், புதுக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.