பாலியல் தொல்லை: முதியவா் கைது
ஒரத்தநாடு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள திருவோணம் தாலுகா தெற்கு கோட்டை கிழக்குத் தெருவைச் சோ்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 52 வயது பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சோ்ந்த சுப்பையன் (62) என்பவா் கடந்த 7 ஆம் தேதி அவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தாராம்.
புகாரின்பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வேம்பு வழக்குப் பதிந்து சுப்பையாவை கைது செய்து, ஒரத்தநாடு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.