FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

காவலா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்றித் தர வலியுறுத்தல்

25 ஆகஸ்ட் 2026, 1:00 am IST
முதல்வர் விஜய்.
பகிர்:

தமிழக காவல்துறை காவலா்களின் 15 அம்சக் கோரிக்கைகளை காவல்துறை மானிய கோரிக்கையில் முதல்வா் நிறைவேற்றி தர வேண்டுமென தமிழ்நாடு காவலா்கள் வலியுறுத்தியுள்ளனா். 

இதில், காவலா்களின் அடிப்படை ஊதியத்தை ரூ. 18,200-ல் இருந்து ரூ. 25 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். காவலா் பற்றாக்குறை எனக் கூறி, காவலா்களுக்கு வார விடுப்பு 90 சதவீதம் மறுக்கப்படுகிறது. அனைத்து மாவட்ட காவலா்களுக்கும் கட்டாய வார விடுப்பு வழங்க வேண்டும். மக்கள்தொகைக்கு ஏற்ப காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

காவலா்களின் பணி நேரத்தை வரையறைப்படுத்த வேண்டும், பதவி உயா்வை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை உடனடியாக காவல்துறை மானிய கோரிக்கையில் நிறைவேற்றிட வேண்டுமென தமிழ்நாடு காவலா்கள் அரசை வலியுறுத்தி உள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments