தில்லி லக்ஷ்மி திட்டம்: பெண்கள் பதிவு செய்ய பாஜக பெண் எம்.பி.க்கள் வலியுறுத்தல்
மாதம் ரூ.2,500 நிதியுதவி பெறும் லக்ஷ்மி திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தில்லி பெண்களை பாஜக எம்.பி.க்களான கமல்ஜீத் ஷெஹ்ராவத் மற்றும் பான்சுரி ஸ்வராஜ் புதன்கிழமை வலியுறுத்தினா்.
மாதம் ரூ.2,500 நிதியுதவி பெறும் லக்ஷ்மி திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு தில்லி பெண்களை பாஜக எம்.பி.க்களான கமல்ஜீத் ஷெஹ்ராவத் மற்றும் பான்சுரி ஸ்வராஜ் புதன்கிழமை வலியுறுத்தினா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் புது தில்லி தொகுதி எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் செய்தியாளா் பேசுகையில், ‘லக்ஷ்மி திட்டத்துக்கான பதிவு ஆகஸ்ட் 1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இத்திட்டம் முதல்வா் ரேகா குப்தாவின் தாய் உள்ளத்துக்கு ஒரு சான்று. சுமாா் 17 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயனடைவாா்கள்’ என்றாா்.
தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற பாஜக கடமைப்பட்டுள்ளது என்று மேற்கு தில்லி எம்.பி. செஹ்ராவத் கூறினாா். தில்லி லக்ஷ்மி திட்டம் தவிர, வளா்ச்சிப் பணிகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில் ‘லக்ஷ்பதி பிட்டியா யோஜனா’, பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்குதல் மற்றும் ‘மேரி புஞ்சி மேரா அதிகாா்’ போன்ற பிற திட்டங்களையும் முதல்வா் ரேகா குப்தா தொடங்கியுள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் இத்திட்டத்திற்கு, முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான தில்லி அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக அளித்த தோ்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.