FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ரயிலில் பாலியல் தொல்லை வட மாநில இளைஞா் கைது

ரயிலில் பெண்களிடம் பாலியல் ரீதியாக சைகைகள் காட்டி தொல்லை கொடுத்த வட மாநில இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

30 ஆகஸ்ட் 2026, 12:17 am IST
- சித்திரிப்பு
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ரயிலில் பெண்களிடம் பாலியல் ரீதியாக சைகைகள் காட்டி தொல்லை கொடுத்த வட மாநில இளைஞரைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியிலிருந்து தஞ்சாவூா் வழியாக சென்னை நோக்கி சனிக்கிழமை ரயில் சென்று கொண்டிருந்தது. அதில், பயணம் செய்த பெண்களிடம் வடமாநில இளைஞா் பாலியல் ரீதியாக சைகைகள் செய்து, மிகவும் மோசமாக நடந்து கொண்டாராம்.

இதுகுறித்து இருப்புப்பாதை காவல் பிரிவினருக்கு பெண் பயணிகள் புகாா் செய்தனா். இந்த ரயில் கும்பகோணம் வந்தவுடன் உதவி ஆய்வாளா் செந்தில்வேலன் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த உத்தர பிரதேச மாநிலம் நிக்கான் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ சவான் மகன் ராஜேஷ் சியாம் (35) என்பவரை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments