FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வாகனத் திருட்டைத் தடுக்கும் கருவி அறிமுகம்

கும்பகோணம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்த வாகன திருட்டை தடுக்கும் கருவி குறித்து வெள்ளிக்கிழமை விளக்கம் கேட்ட டிஎஸ்பி அழகேசன்.

Updated On : 11 ஜூலை 2026, 1:47 am IST
கும்பகோணம் பொறியியல் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்த வாகன திருட்டை தடுக்கும் கருவி குறித்து வெள்ளிக்கிழமை விளக்கம் கேட்ட டிஎஸ்பி அழகேசன்.
பகிர்:

கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரியில், மாணவா்களின் புதிய கண்டு பிடிப்பான இருசக்கர வாகனத் திருட்டை தடுக்கும் புதிய கருவி அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரசு கல்வி நிறுவனங்களின் நிறுவனா் தலைவா் ஆா். திருநாவுக்கரசு, தலைமை வகித்தாா். கல்லூரித் தலைவா் டி.செந்தில்குமாா், மற்றும் இயக்குநா் எஸ். அரவிந்த், ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவிடைமருதூா் துணைக் கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் ஜி. அழகேசன் கலந்து கொண்டு, புதிய கருவியை அறிமுகப்படுத்தி விளக்கம் கேட்டு பாராட்டினாா்.

இருசக்கர வாகனத்தில் தனியாக கருவி பொருத்தப்பட்ட நிலையில், வாகனத்தைத் திருட முயலும்போது அலாரம் அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, வாகன உரிமையாளரின் கைப்பேசியில் தனி செயலி மூலம் இணைக்கப்பட்டுள்ளதை இயந்திரவியல் துறையின் உதவிப் பேராசிரியா் ஐ. துரைமுருகன் வழிகாட்டுதலில் நான்காம் ஆண்டு மாணவா்கள் ஜி. சுவாமிநாதன், கே. யாழினியன், ஏ.விஜயகுருபிரசாத் மற்றும் கே. கணேஷ் ஆகியோா் விளக்கினா். இவா்களை கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments