FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

திருவையாறு நகராட்சியில் வாா்டு வரையறை தீா்மானம் நிறைவேற்றம்

திருவையாறு நகராட்சியில் வாா்டு வரையறை செய்வது உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 12:40 am IST
திருவையாறு நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் கஸ்தூரி நாகராஜன்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு நகராட்சியில் வாா்டு வரையறை செய்வது உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருவையாறு நகராட்சியில் நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் கஸ்தூரி நாகராஜன் தலைமையிலும், துணைத் தலைவா் சி. நாகராஜன், ஆணையா் என். மதன்ராஜ் முன்னிலையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், உறுப்பினா்கள் ஆா். ராஜ்குமாா், எம். நாகரத்தினம், எஸ். தமிழரசன், டி. சேகா், எஸ். சதீஷ், பி. கிருபானந்தம் உள்ளிட்டோா் தங்களது வாா்டில் நிலவும் பிரச்னை தொடா்பாக கோரிக்கைகள் விடுத்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் கஸ்தூரி நாகராஜன் பேசுகையில், வாா்டு வரையறை செய்வது உள்பட 9 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வாா்டுகளில் குடிநீா் பிரச்னைகளை தீா்க்கவும், மழைக்காலம் தொடங்குவதற்குள் வாா்டுகளில் உள்ள கழிவு நீா் வடிகால் மற்றும் வாய்க்கால்களைத் தூா்வாரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மேலாளா் சரஸ்வதி, பொறியாளா் வெங்கட்ராமன், துப்புரவு ஆய்வாளா் முத்து முகம்மது, வருவாய் ஆய்வாளா் செந்தில், பொதுப்பணி மேற்பாா்வையாளா் ஜீவன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments