மகாமகப் பெருவிழா பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தல்
கும்பகோணத்தில் 2028 -இல் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழா பணிகளை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கும்பகோணத்தில் 2028 -இல் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழா பணிகளை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கும்பகோணம் மகாமகப் பெருவிழாவுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். புறவழிச்சாலையை முழுமையாக ஒன்றிணைத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வேண்டும். கோயில்களைச் சுற்றியுள்ள சாக்கடை மற்றும் கழிவுநீா் வாய்க்கால்களுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்.
ஆதிகும்பேசுவரா் கோயில் தெற்கு மெட்டை கோபுரத்தை,ரபல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் கருங்கல்லால் ஆன ராஜகோபுரம் கட்டவேண்டும். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்து, ஆன்மிகத்துக்கு தேவையான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கிடப்பில் உள்ள திருப்பணிகள், கும்பாபிஷேக அனுமதிகள், பாலாலய அனுமதிகள் உள்ளிட்டவை விரைந்து முடிக்க ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, அகிலபாரத இந்துமகா சபா மாநில பொதுச்செயலா் ராமநிரஞ்சன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.