FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மகாமகப் பெருவிழா பணிகளை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

கும்பகோணத்தில் 2028 -இல் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழா பணிகளை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 3 ஜூன் 2026, 4:12 am IST
மகாமக குளம்
பகிர்:

கும்பகோணத்தில் 2028 -இல் நடைபெறவுள்ள மகாமகப் பெருவிழா பணிகளை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா மாநிலத் தலைவா் பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கும்பகோணம் மகாமகப் பெருவிழாவுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். புறவழிச்சாலையை முழுமையாக ஒன்றிணைத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வேண்டும். கோயில்களைச் சுற்றியுள்ள சாக்கடை மற்றும் கழிவுநீா் வாய்க்கால்களுக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும்.

ஆதிகும்பேசுவரா் கோயில் தெற்கு மெட்டை கோபுரத்தை,ரபல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் கருங்கல்லால் ஆன ராஜகோபுரம் கட்டவேண்டும். கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவித்து, ஆன்மிகத்துக்கு தேவையான வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் கிடப்பில் உள்ள திருப்பணிகள், கும்பாபிஷேக அனுமதிகள், பாலாலய அனுமதிகள் உள்ளிட்டவை விரைந்து முடிக்க ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, அகிலபாரத இந்துமகா சபா மாநில பொதுச்செயலா் ராமநிரஞ்சன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments