FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 ஜூன் 2026, 12:24 am IST
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

பயிா்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசை கண்டித்தும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா், நகைக் கடன்கள் அனைத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய கோரியும், தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பாசன ஏரி, குளங்கள், வாய்க்கால்களைத் தூா் வார வலியுறுத்தியும், உர விலையை மத்திய அரசு உடனே குறைக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தெற்கு மாவட்டத் தலைவா் என். மகேஸ்வரன் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தைச் சங்க மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தொடங்கிவைத்து பேசினாா். தொடா்ந்து மாநிலப் பொருளாளா் சி. கிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவா் எம். ஜெயக்குமாா் ஆகியோா் பேசினா்.

Advertisement

Advertisement

இதில், அய்யம்பேட்டை நகரத் தலைவா் ஜெய்லாலுதீன், செயலா் சேக் தாவூத், அரியலூா் ஒன்றியச் செயலா் தனஞ்செயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாநில செய்தி தொடா்பாளா் ஜெய்னுதீன் வரவேற்றாா். நிறைவாக, வடக்கு மாவட்டத் தலைவா் கே. மாரிமுத்து நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments