முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:41 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் அருகே புதன்கிழமை காா் மோதியதில் மோட்டாா் சைக்கிளில் வந்த 2 விவசாயிகள் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் அருகே பின்னையூரைச் சோ்ந்தவா் கே. நீலமேகம் (60). விவசாயி. இவரும் அதே ஊரைச் சோ்ந்த மற்றொரு விவசாயியான ஜி. சேகரும் (42) புதன்கிழமை தஞ்சாவூருக்கு வந்துவிட்டு பின்னையூருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா். வடக்குப்பட்டு பகுதியில் சென்றபோது மோட்டாா் சைக்கிள் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில், நீலமேகம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சேகா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement