முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 போ் கைது

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:09 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கும்பகோணத்தில் ஆயுதங்களுடன் மறைந்திருந்த 6 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பெரும்பாண்டி மயான அருகே மா்மநபா்கள் சிலா் ஆயுதங்களுடன் இருப்பதாக கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அவா்களை பிடித்து விசாரணை செய்தனா்.

அதில், கும்பகோணம் கீழக்கொட்டையூா் மேலத்தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் அருண் ( 26), திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூா் மேலப்பருத்தியூரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் விக்னேஸ்வரன் (31), கும்பகோணம் நியூராம் நகா் தியாகராஜன் மகன் வெங்கடேசன் (32), கும்பகோணம் மேலக்காவேரி சசிகுமாா் மகன் வெங்கடேஷ் (27), திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி பாலசுந்தரம் மகன் சிவனேசன் (28), கொரடாச்சேரி பெருமாளகரம் கண்ணன் மகன் கமலேஷ் (24) என்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதில், அருணின் சகோதரா் அதே பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் என்பவரின் மகளை காதலித்து திருமணம் செய்ததால், மகாலிங்கத்துக்கும் அருணுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி அருணுக்கு ஆதரவாக வந்த அவரது நண்பரான விக்னேசுவரனை மகாலிங்கம் தரப்பினா் வெட்டினா்.

இதனால் ஆத்திரமடைந்த அருண், விக்னேசுவரன் ஆகிய இருவரும் மகாலிங்கத்தை கொலை செய்ய திட்டமிட்டதும் அதற்காக வெள்ளிக்கிழமை 6 பேரும் இருசக்கர வாகனங்களில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்ததும் தெரியவந்தது. அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து அரிவாள், கத்தி, 6 கைப்பேசிகள், இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.