தண்ணீர் கோரி அபினிமங்கலத்தில் மறியல்
தண்ணீர் கோரி துறையூர் அருகே அபினிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கோரி துறையூர் அருகே அபினிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் புதன்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முசிறி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அபினிமங்கலம் கிராமத்தில் கடந்த 8 நாளாக மின் மோட்டார் பழுதால் தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை.
இது தொடர்பாக அபினிமங்கலம் ஊராட்சியிலும், முசிறி ஒன்றிய அலுவலகத்திலும் புகார் கூறியும் நடவடிக்கை இல்லாத நிலையில், அதிருப்தியடைந்த அந்த கிராம பெண்கள் புதன்கிழமை காலை காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து வந்த முசிறி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.