FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

மாநகரின் சில பகுதிகளில் ஜூன் 7 மின் நிறுத்தம்

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நீதிமன்றம் பெயரிலான துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை  (ஜூன் 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.

Updated On : 7 ஜூன் 2018, 9:23 am IST
பகிர்:

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட நீதிமன்றம் பெயரிலான துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை  (ஜூன் 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால்  வில்லியம்ஸ் சாலை, புரோமினேட் சாலை, வார்னர்ஸ் சாலை, கன்டோன்மென்ட் பகுதிகள், வயலூர் சாலை, வண்ணார்பேட்டை, குமரன் நகர், சீனிவாசன் நகர், பீமநகர், ராஜா காலனி, கிருஷ்ணன் கோயில், மாரியம்மன் கோயில், ஹூபர் சாலை, உழவர்சந்தை, பட்டாபிராமன் சாலை, புத்தூர், பாரதி நகர், அரசு பொது மருத்துவமனை, புத்தூர் ஆபீசர்ஸ் காலனி, பிஷப் ஹூபர் கல்லூரி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என நகரிய செயற்பொறியாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சிறுகனூர் பகுதிகளில் நாளை... சிறுகனூர் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிறுகனூர், சி.ஆர். பாளையம், திருப்பட்டூர், எம்.ஆர். பாளையம், வாலையூர், சனமங்கலம், மணியங்குறிச்சி, ரெட்டிமாங்குடி, பி.கே. அகரம், நெய்குளம், நெடுங்கூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், ஆவாரவள்ளி, சீதேவிமங்களம், கூத்தனூர் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments