நெல் கொள்முதலுக்கு உரிய தொகை வழங்க வேண்டும்
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உரிய தொகை வழங்க வேண்டும எனதமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு உரிய தொகை வழங்க வேண்டும எனதமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
திருச்சிக்கு புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது : திருச்சி முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் ஆற்றில் அணை உடைந்ததற்கு மணல் கொள்ளை தான் காரணம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் மூட்டைகளை தங்கு தடையின்றி கொள்முதல் செய்வதுடன், அவற்றுக்கு உரிய தொகையையும் தடையின்றி வழங்க வேண்டும். கொள்முதல் விலையாக கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ. 4,000 எனவும் நெல்லுக்கு ரூ. 3,000 எனவும் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.