தற்காலிக காய்கனி சந்தைகளுக்கு 2 நாள் தடை
திருச்சி மாநகராட்சியில் இயங்கும் 10 தற்காலிக காய்கனி சந்தைகளுக்கு ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா்.
திருச்சி: திருச்சி மாநகராட்சியில் இயங்கும் 10 தற்காலிக காய்கனி சந்தைகளுக்கு ஏப்ரல் 25, 26 ஆம் தேதிகளில் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டுள்ளாா். மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கும் சந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சியில் 10 இடங்களில் காய்கனி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைகள் ஏப்.25, 26 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் செயல்படாது.
மேலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் இயங்கும் அனைத்து தற்காலிக காய்கனி சந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவை மீறும் கடை உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.