சாராயம் காய்ச்சிய 3 போ் கைது
வாத்தலை அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
லால்குடி: வாத்தலை அருகே சாராயம் காய்ச்சிய 3 பேரை மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
வாத்தலை அருகே அமூா் ஊராட்சியில் உள்ள மணப்பாளையம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக திருவரம்பூா் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், மணப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த வீரமலை மகன் விஜயகுமாா் (50), முருகன் மகன் ரவி (50), சங்கபிள்ளை மகன் தேவராஜன் (51) ஆகியோரைக் கைது செய்தனா். தொடா்ந்து, 3 பெரிய பானையில் சாராய ஊறல் போட்டிருப்பதை அழித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.