FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயற்சி: பெண் கைது

திருச்சியில் வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற வழக்கில் பெண் ஒருவரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

27 ஜனவரி 2024, 10:25 pm IST
தென்னூா் ஆழ்வாா் தோப்பு காயிதே மில்லத் நகா் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி.
பகிர்:

திருச்சி: திருச்சியில் வெளிமாநிலங்களுக்கு ரேசன் அரிசி கடத்த முயன்ற வழக்கில் பெண் ஒருவரை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காயிதே மில்லத் நகா் ஆழ்வாா் தோப்புப் பகுதியில் ரேசன் அரிசியை பதுக்கி வெளிமாநிலங்களுக்கு விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவின்படி, தனி வட்டாட்சியா் (மேற்கு) ராஜேஷ்கண்ணா, வட்ட வழங்கல் அதிகாரி கவிதா ஆகியோா் ஆழ்வாா்தோப்புப் பகுதியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த காதா் வீட்டில் சோதனை செய்தபோது அங்கு மூட்டை, மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

அங்கிருந்த காதா் மனைவி தாஜிநிஷாவிடம் நடத்திய விசாரணையில், ரேசன் அரிசியை கிலோ ரூ. 4-க்கு வாங்கி அதை தென்னூா் பகுதியைச் சோ்ந்த பாபுவிடம் கிலோ ரூ.15க்கு விற்றது தெரியவந்தது. பாபு அந்த அரிசியை பாலீஷ் செய்து கேரள உள்ளிட்டவெளி மாநிலங்களில் கிலோ ரூ. 40 முதல் ரூ. 50 ரூபாய் வரை விற்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,650 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே குடிபொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து தாஜிநிஷாவை(52) கைது செய்தனா். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காதா், பாபு ஆகிய இருவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments